Blog Archive

Saturday, 8 October 2011

அக்டோபர் 10 உலக மனநல நாள்

  கேரன் ஜார்ஜ் தனது 10 வயதான மகன் அலெக்ஸ் மூளை வளர்ச்சி குன்றியவன் என கண்டறிந்தபோது அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மனமில்லாதவராய் இருந்தார். மாற்று சிகிச்சை அளிக்க விரும்பியபோது மூளை ஆற்றலை வளர்க்கும் மென்பொருள் பயிற்சி பற்றி அவர் அறிய நேர்ந்தது. Cogmed என்பது மூளை ஆற்றல் கட்டுக்கோப்பு பயிற்சியாகும். இப்பயிற்சி மூலம் தனது மகனின் மூளை ஆற்றலை வளர்த்து அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் தாயார் ஈடுபட்டார். 5 வார காலம் அலெக்ஸ் கணினி முன்னால் குறைந்தது ஒரு மணிநேரம் செலவழித்து அதன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயிற்சி என்ன என்று நினைக்கிறீர்களா! இயந்திர மனிதனோடு அலெக்ஸ் தனனுடைய அடிப்படை அறிவை கொண்டு போட்டியிட வேண்டும். பயிற்சியில் விடை கூற அவன் தவறான விசையை அழுத்திவிட்டால், இயந்திர மனிதன் தான் விழிபிதுங்கி நிற்பதை கேலிப்படத்துடன் காட்டி, விட்டுவிட்டு எரியும் விளக்கின் மூலம் சரியான முறையை தெளிவுபடுத்தும். அந்த பயிற்சிக்கு பிறகு அலெக்ஸினுடைய மனதை ஒருமுகப்படுத்தும் திறன், நினைவாற்றல் மற்றும் அன்றாட வாழ்வு செயல்பாடுகளில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.  
மூளை ஆற்றல் கட்டுக்கோப்பை மேம்படுத்த வளரும் தொழில்துறை தான் இந்த கணினி பயிற்சி முறை. இதனை மூளை வளர்ச்சி குன்றியவர்கள் மட்டுமல்ல நிகைவிழப்பு, அடிக்கடி கவன இழப்பால் பாதிக்கப்படுவோடும் பயன்படுத்துகின்றனர். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களது மூளை ஆற்றலின் கட்டுக்கோப்பை உருவாக்கும் மென்பொருட்களில் ஒன்று தான் cogmed. அமெரிக்காவில் இத்தகைய மூளை வளர்ச்சி ஆற்றலுக்கான மென்பொருட்களின் விற்பனை 2005 லிருந்து 2007 ஆண்டிற்குள் இரண்டு மடங்காகி 225 மில்லியன் அமெரிக்க டாலராகியது என்று ஷார்ப்பிரென்ஸ் என்ற ஆலோசனைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய பொருட்களுக்கான சந்தை பரவல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென ஆராய்ந்தால் வளரும் தலைமுறையினர் நினைவாற்றல் இழப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளை இழக்கும் நிலையை குறைக்கும் ஆசை தான் அடிப்படை என்று தெரிய வருகிறது.
இத்தகைய மென்பொருட்களின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் நலக்காப்பீட்டு நிறுவனங்கள் கூட மூளை ஆற்றல் கட்டுக்கோப்பை வளர்க்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, தங்களிடம் நலக்காப்பீடு செய்துள்ள உறுப்பினருக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சிகள் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஹூமெனே என்ற நலக்காப்பீட்டு நிறுவனம் கற்றல் மற்றும் நினைவாற்றலை முன்னேற்றுவதற்கு மூளை ஆற்றல் கட்டுக்கோப்பிற்கு பயிற்சிகள் வழங்குகின்ற போசிட்டு சையின்ஸ் என்ற நிறுவனத்தோடு இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது தற்போது தான் வெகுவாக வளர்ந்து வருகின்ற துறையாதலால் எவ்வித வர்த்தக மாதிரி வெற்றிகரமாக அமையும் என்பதில் தெளிவுகள் இல்லை. Nintendo என்ற நிறுவனம் மூளை ஆற்றல் கட்டுக்கோப்பு சிகிச்சைக்கு பயனுள்ளதாக நிரூபிக்ப்படாத கணினி விளையாட்டுக்களை உருவாக்கி வருகின்றது. Nova Vision எனப்படும் தனியார் தொழில் நிறுவனம் பார்வைதிறனை அதிகரிக்கும் முயற்சிகளை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாக அமைப்பு வலிப்பு மற்றும் மூளை காயங்களிலிருந்து மீண்டுவரும் நோயாளிகளின் பார்வை திறனை அதிகரிக்கும் சிகிச்சைக்கான அங்கீகாரத்தை Nova Vision நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இத்துறையில் சிகிச்சை தரவுகள் இல்லாத எவ்வித மென்பொருள் முயற்சிகளும் நீண்டகால வளர்ச்சியடைய முடியாது. எனவே சரியான ஆய்வுகள் மூலம் பயிற்சிகளை விளக்குவது வெற்றியை கொணரும். Cogmed மென்பொருளும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது நினைவு மற்றும் கவனம் தொடர்பான பயிற்சிகளுக்கு ஏற்றததானதாக அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாக அமைப்பால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அதனைப்பற்றி வெளியிடப்பட்ட சில ஆய்வுகள் மூளையின் குறுகியகால வளர்ச்சியை தூண்டுகின்றன என்பதை நிரூபிக்கின்றன. Cogmed என்ற மென்பொருள் பயிற்சியை பொறுத்தவரை குறைந்தகால நினைவாற்றல் வளர்ச்சி பற்றிய உடனடி பயன்கள் ஊக்கமூட்டுவதாக இருந்தாலும் அது எவ்வளவு நாள் தொடரும் என்பதில் தெளிவுகள் இல்லை. இத்தகைய மூளை ஆற்றல் வளர்ச்சிக்கான கணினி மென்பொருள் பயிற்சி பெறுகின்ற குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வை மற்றும் தொடர் பயிற்சி மூலம் தான் இப்பயிற்சியில் தொடர்ச்சியான பயனை பெற முடியும். எனவே இம்முயற்ச்சி வாழ்வு முழுவதும் தொடருகின்ற பயிற்சியாக தான் இருக்கும். இதை பற்றி தொடருகின்ற ஆய்வு முயற்சிகள் எதிர்காலத்தில் மூளையின் ஆற்றல் கட்டுக்கோப்பை வளர்க்கும் புதுமையான பாதைகளை அறிமுகப்படுத்தலாம்.
இந்நிலையில் பிற உடல் உறுப்புகளின் நலம் உடல் நலத்திற்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மூளையின் நலமும் முக்கியம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள நரம்பியல் நிறுவனம் மார்ச் திங்கள் 10 முதல் 16 வரையான சர்வதேச மூளை விழிப்புணர்வு வாரத்தில் நலமான மூளை ஆற்றல் பெற்றிருக்க 14 முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. சாக்லேட், கோக்கோ வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா முதலியவை கலந்த கறுப்பு சாக்லேட், அதிகமாக கற்பதற்கும் மற்றும் நினைவில் கொள்ளும் அளவிற்கு மூளையை இயக்குகிறது. அதிக நேர ஓய்வு எடுத்தால், புதிய தகவல்களை மிக நன்றாக நீண்டகாலம் நினைவில் கொள்ளும் வகையில் மூளையை சேமிக்க செய்யும் திறன் வளர்க்கப்படுகிறது. மீன் சாப்பிடுவதும், மூளை இயக்கத்தை தூண்டுகின்ற செயல்பாடுகளை மேற்கொள்வதும் மூளையின் நலனை அதிகரிக்கும். அதாவது அருங்காட்சியகத்திற்கு சென்ற பின் வெளியே வந்து அங்கு பார்த்தவற்றை நினைபடுத்தி கொள்வது, பாடல்களை மனப்பாடம் செய்வது ஆகியவை மூளை இயக்கத்தை தூண்டுகின்ற செயல்பாடுகளாகும். புதிர்களின் விடை காணும் முயற்சிகள், முக்கிய பயன்பாட்டில் இல்லாத கையை அதிகமாக பயன்படுத்துவது, சிறு கற்களில் விழாமல் நடக்க முயற்சி செய்வது என்ற முயற்சிகள் எல்லாம் மூளை ஆற்றலை நலனை வளர்க்கும் அம்சங்களாம். அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறுசிறு உடல், உளநல பயிற்சிகள் மூளை ஆற்றலை வளர்க்கும் மதிப்பில்லா உத்திகளாக மாறும். அவைகளை தினமும் செய்து வழக்கமாக்கி கொள்ளலாமே!            -நன்றி CRI

Sunday, 4 September 2011


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.

'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

Radhakrishnan42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், கொள்ளை, கொலை தொழிலைச் செய்து வந்த திருடனை
அடக்கடவுளே !
பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த கண்ணாயிரம் திடீரென்று எழுதிக் கொண்டு இருந்த விடைத்தாளை சுருட்டி கசக்கினான். பின் அந்தப் பேப்பரை பிரித்து அதில் எழுத ஆரம்பித்தான்.

இதனை கவனித்த தேர்வு கண்காணிப்பாளர் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு கண்ணாயிரம் இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் எழுதச் சொல்லி போட்டு இருக்குது அதனால தான் என்று பதில் சொன்னானாம்.
ராமாயணம் என்ற வராலாற்று காவியத்தை படைக்கும் அளவிற்கு வால்மீகி உருவாகக் காரணமான நாரதரைப் போல், விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர்; ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். பள்ளியில் இருக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி என்று வருகின்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கே தலை குனிவானது. அதே போல் முன்பு போல் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. பள்ளியின் வகுப்பறைகளில் சரியாக சொல்லிக் கொடுக்காமல் தன்னிடம் டியூஷன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போக்கு தற்பொழுது ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.


பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களிடமும் காலப்போக்கில் பலவித குற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவது போன்று ஏழைக் குழந்தைகள் பயிலும் அரசாங்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவதில்லை. அதனை விடக் கொடுமை தந்தையாக இருக்க வேண்டிய சில ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடந்து பாலியல் குற்றச்சாட்டில் கைது ஆகின்ற கொடுமையும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இவை தவிர பிற நாடுகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் தனிப்பட்ட நலனில் அக்கறைகாட்ட மாட்டார்களாம். ஆனால் இந்தியாவில் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டி அடிக்க வேண்டும் பொழுது அடித்தும் படிக்க வைத்தனர். தற்பொழுது ஆசிரியர்கள் லேசாக அடித்தாலே அதனை பெரிதாக்கும் நிலையும் இருந்து வருகிறது. மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.  திருமலை கோளுந்து

Thursday, 11 August 2011


சுதந்திர தின வாழ்த்துக்கள்   

Wednesday, 10 August 2011

 வேதாத்திரி மகரிஷின் 101 வது ஜெயந்தி விழா வரும் 14 ம் தேதி  உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது .உலக சமாதனத்தின் உயிர்  குரலாக ஓலித்தவர் அவரின் எண்ணம் நிறைவேற மனவளக்கலை பயிற்சி  தொடர்வோம் ,பண்படுவோம் ,பரப்புவோம்